Tuesday 30th of April 2024 12:06:29 PM GMT

LANGUAGE - TAMIL
.
இந்தியாவில் தொடரும் கொரோனா ஆதிக்கம்: நேற்று 3,92,459 பேருக்கு தொற்றுறுதி!

இந்தியாவில் தொடரும் கொரோனா ஆதிக்கம்: நேற்று 3,92,459 பேருக்கு தொற்றுறுதி!


இந்தியாவில் நேற்று மேலும் 3,92,469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 3,984 கொரோனா மரணங்களும் நேற்று பதிவாயின.

புதிய தொற்று நோயாளர்களுடன் இந்தியாவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கேடியே 95 இலட்சத்து 49 ஆயிரத்து 656 -ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தோர் எண்ணிக்கை 2 இலட்சத்து 15 ஆயிரத்து 523- ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, நேற்று 3 இலட்சத்து 8 ஆயிரத்து 522 பேர் குணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கேடியே 59 இலட்சத்து 81 ஆயிரத்து 772-ஆக பதிவாகியுள்ளது.

தற்போது நாடு முழுவதும் 33 இலட்சத்து 43 ஆயிரத்து 910 பேர் தொற்று நோய் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் இந்திய மத்திய சுகாதார அமைச்சு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE